Tuesday, January 10, 2012


                                             காலம் மாறிப் போச்சு ...............

உலகில் அதிகரித்து வரும் சனத்தொகையின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு உணவு உற்பத்தி அதிகரிக்கப்படவேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு வெளிப்படையான உண்மையாகும.;  அதிகரித்துவரும் மக்களின் உணவுத்தேவையை ஈடுசெய்யும் முகமாக விளைச்சலை அதிகமாக்குவதற்கு நைதரசன் வளமாக்கி உயர்விளைச்சலை தரக்கூடியதாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பெறப்பட்ட பயிரினங்களின் தன்டு இலைப்பகுதிகள் மிகவும்   சாற்றுத்தன்மையாக காணப்படுவதனால் இலகுவாக பூச்சி பீடைத்தாக்கங்களுக்கு உட்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பாரிய நஸ்டம் ஏற்படுகின்றது. இந்தப்ப+ச்சித்தாக்கங்களை கடடுப்படுத்த இந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதோ  பீடைநாசினி ஆகும் இது சூழலுக்கு பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
செயற்கையாகத்தொகுக்கப்பட்ட பீடைநாசினியின் பாவனையினால் புவியின் மண்வளம் குன்றிப்போகின்றது. உணவு நஞ்சாக்கம் நீர்நிலைகள் வளிமண்டலம் என்பன மாசடைகின்றன. இப்பீடைநாசினி விசிறப்பட்ட உணவுப்பொருட்களை மனிதன் உணவாக உட்கொள்ளும்போது ஆபத்தான நோய்க்கான காரணங்களுக்கு உட்படுகின்றார். ஆனால் இவற்றை எல்லாம் அறிந்தாலும் தற்போதைய விவசாயிகள் இதனை கவனத்தில் கொள்ளவில்லை அவர்கள் தமது விளைச்சலை பெருக்குவதற்காக இப்பீடைநாசினிகளை பயன்படுத்துகிறார்கள் இப்பீடைநாசினிகளை பயன்படுத்துவதனால் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் மண்புளு போன்ற உயிரினங்கள் அழிவடைகின்றன. இதனால் உணவுச்சங்கிலியில் மாற்றம் ஏற்படுகின்றது.
 ஈனால் ஆரம்பகாலத்தில் மாட்டினால் வயல் உழுது வீட்டில் பெருகும் குப்பை கூழங்களை பசளையாக்கி விவசாயம் செய்யப்பயன்படுத்துகின்றனர் பின்னர் தாவரத்தில் ஏற்படும் நோய்;த்தாக்கங்களுக்கு எருதின் சலம் மற்றும் சாணம் என்பவற்றை தெளித்தனர்  வயலில் காணப்படும் களையினைப்பிடுங்க மனித உழைப்பு அங்கு பயன்படுத்தப்பட்டது அதன் பின் நெல் அறுவடை செய்வதற்கும் சூடு மிதிப்பதற்கும் மனித உழைப்பே பயன்பட்டது.  இதனால் உயிரினங்களுக்கோ மனிதனுக்கோ பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது. ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டது .
வயலினை உழுவதற்கு உழவு இயந்திரம் நெல் வளர்வதற்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட பசளை பின் நோய்த்தாக்கங்களில் இருந்து பயிர்கள் விடுபடவும் களைகள் அகற்றவும் பீடைநாசினி அறுவடை செய்ய அறுவடை இயந்திரம் என தற்போது மனித உழைப்பு குறைந்து இயந்திரங்களின் உழைப்பு அதிகரி;த்து செல்கின்றது. இதனால் மனிதனின் செயல் திறன் குறை வடைந்து வருகின்றது . முன்னைய விவசாயிகளுக்கும் தற்போதைய விவசாயிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என விபரிக்கின்றார். 80 வயதுடைய வீரகத்தி சின்னத்துரை
“எனக்கு இப்போ 80 வயதாகின்றது நான் சிறுவனானாக இருக்கும்போது எனது தந்தையுடன் தோட்டத்திற்கு செல்வேன் எங்கள் தோட்டம் 8ஏக்கரில் இருக்கின்றது ஒருபக்கத்தில் கத்தரி கீரை மறுபக்கத்தில் வெண்டி புடோல் என எல்லாப்பக்கங்களும் காய்கறிகளாகவே இருக்கும் அப்போது இப்பமாதிரி சுவிச்போட்டவுடனே தண்ணிவராது துலாமிதித்துதான் தண்ணிகிள்ளிதோட்டத்திற்கு நீர்பாய்ச்சவேண்டும். பசளை எல்லாம் வீட்டில் உள்ள குப்பைகள் எல்லாம் சேர்த்து கடகத்தில் நிரப்பி  தலையில் சுமந்து சென்றுதான் தோட்டத்திற்கு பசளை போடுவோம் அந்தக்காலத்தில் எல்லாம் இயற்கையினை கொண்டு பயன்பெறுவதாலேயே எந்த நோயும் இல்லாமல் 80வருடம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்கிறேன் இப்ப எடுத்ததற்கெல்லாம் செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால் மனிதன் உழைக்கின்ற காசு அரைவாசி வைத்தியசாலைக்கே கொடுக்கின்றான் இப்ப எல்லாம் இயந்திரம் என்பதனால் மனிதன் சோம்பேறி ஆகிவிட்டான் இதனால் அவன் பல நோய்களுக்கு உள்ளாகின்றான்.



 

0 comments:

Post a Comment