Wednesday, July 6, 2011

நினைவுகளைத்
துரத்திச் செல்லும் இரவுகள்
இலக்கின்றிப் பயணிக்கும்

உன்
பிஞ்சு மனதிலே
தஞ்சம் கேட்டு
நித்தம் சண்டை பிடிக்கும்

பசியில்லாப் பகல்களும்
பட்டிணி இரவுகளும்
பழகிப் போகும்

பல்லியிடம் வீசியெறிந்த
உன் முதல் பல்
என் காதல் கருவூலத்தை
அலங்கரிக்கும்

உனக்குள் கட்டமைத்த
வாழ்க்கைச் சுனையில்
என் வேர்கள் நீர்தேடும்

இருந்தும்..
தவறுகளின் பட்டியலால்
மலடான நம் காதல்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் பூப்பூக்கும்

 

0 comments:

Post a Comment